Tiruvannamalai Temple
Table of Content(toc)
திருவண்ணாமலை கோயில் விபரம்
கோயிலின் பெயர் : அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்சமஸ்கிருத பெயர்: அருணாச்சலேஸ்வரர்
தமிழில்: திரு அண்ணாமலையார் திருக்கோயில்
மூலவர் : அண்ணாமலையார்
தாயார் : உண்ணாமுலையால் (பார்வதி தேவி)
சிறப்பு : திரு கார்த்திகை தீபம்
சிறப்பு விழாக்கள் : சிவராத்திரி, கிரிவலம், தீப விழாக்கள்
அமைந்துள்ள இடம் : திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
திருவண்ணாமலை பெயர் காரணம்
அண்ணுதல் என்றால் நெருங்குதல், அண்ணா என்றால் நெருங்க முடியாத, அதாவது திருமால் வராக அவதாரமாக சிவனின் அடியையும், அன்னமாக பிரம்மா முடியையும் காண முயன்று முடியாத நெருப்பு மலை என்பதால், அவர் அண்ணாமலை என்று பெயர் வந்தது.கைலாயத்தில் சிவன் இருப்பதால் கைலாய மலை சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலை மிகவும் சிறப்பு வாய்ந்தது.(alert-success)
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை கோயிலின் சிறப்பம்சம்
திருவாரூரில் ஒருவர் பிறந்தாலே முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என முன்னோர்கள் கூறுவதுண்டு. அந்த அள்விற்கு நினைத்தாலே முக்தி தரக் கூடிய அளவு திருவண்ணாமலை மிகவும் சிறப்பு வாய்ந்தது.(alert-passed)
மலையின் வரலாறு
திருவண்ணாமலையில் இருக்கும் மலை 260 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில், பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சைவர்களின் நம்பிக்கையின் படி, இந்த மலையானது கிருதா யுகத்தில் நெருப்பு மலையாக இருந்தது, திரேதா யுகத்தில் மாணிக்க மலையாக இருந்தது, துவாபர யுகத்தில் தங்க மலையாக இருந்தது. தற்போது கலி யுகத்தில் கல் மலையாக உள்ளது என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.(alert-success)
சன்னதிகள்
இந்த திருத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மலையே சிவலிங்கமாக உள்ளது எனபது நம்பிக்கை.மேலும், முருகன், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், திருமால், பைரவர், பிரம்ம லிங்கம், பாதாள லிங்கம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
கிளி கோபுரம் (81 அடி உயரம்)
மேற்கே பேய் கோபுரம் (1 அடி உயரம்),
மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)
தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),
தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)
வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),
வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்) (alert-passed)
சிவராத்திரி தோன்றிய வரலாறு
திருமால், பிரம்மாவுக்கு இடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட, அங்கு நெருப்பு பிழம்பாகத் தோன்றினார் ஈசன், இதில் அடி, முடியை யார் முதலில் பார்க்கிறாரோ அவரே பெரியவர் என்றார் சிவன்.உடனே திருமால் வராக (பன்றி) வடிவம் எடுத்து நிலைத்தை குடைந்து ஈசனின் அடியைக் காணவும், பிரம்மா அன்ன வடிவம் எடுத்து பறந்து அவரின் முடியைக் காணவும் புறப்பட்டனர்.
பல ஆண்டுகள் ஆகியும் அடியை காண முடியாத திருமால் திரும்ப, அதே நேரம் மேலிருந்து விழுந்த தாழம்பூவைப் பிடித்து, நீ எங்கிருந்து வருகின்றாய் என கேட்க, சிவன் தலையில் சூடிப்பெற்றிருந்த நான், தவறி விழுந்து பல ஆண்டுகளாக கீழே வந்து கொண்டிருக்கின்றேன் என்றார். அப்போது நீ சிவனின் முடியைப், நான் பார்த்துவிட்டேன் என சாட்சி சொல்ல வேண்டும் என கேட்டார் பிரம்மன். தாழம்பூவும் சரியென்று சொன்னது.
சிவனின் முடியைப் பார்த்துவிட்டேன் இதனால் நானே வெற்றி பெற்றேன் என கூறி திருமாலை எள்ளிநகையாடினார் பிரம்மா. இதனால் ருத்திரனாக மாறிய சிவன், பொய்யுரைத்த தாழம்பூ இனி என் பூஜைக்கு பயன்படாது. அதோடு பத்ம கற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாய் என உரைத்தார். இனி உலகத்தில் உனக்கென தனி ஆலயம் அமையாது என கூறினார்.
உடனே தன் தவற்றை உணர்ந்த பிரம்ம தேவர் மன்னிப்பு கேட்கவே, இனி
சிவ லிங்கத்தில் அடிப்பகுதியில் பிரம்மன், நடுவில் விஷ்ணு, மேல் பாகத்தில் சிவனும் நின்று சிவ லிங்கமாக காட்சி கொடுப்போம் என அருள் புரிந்தார்.
அப்படி சிவலிங்கமாக தோன்றிய நாள் தான் மகா சிவராத்திரி நாளாகும்.(alert-success)
சிவனை நோக்கி தவமிருந்த பார்வதிக்கு தன் இடப்பாகம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய், கருவறையின் பின் புறம் அமர்ந்தார். இந்த கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் ஐம்பொன் சிலை உள்ளது. இதனால்தான் திருஅண்ணாமலையானை நினைக்க முக்தி கிடைக்கும்.
கிரிவலம்
800 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது கிபி 1240ல் இங்கு கிரிவலம் செல்ல ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்து பணி செய்தார்.இந்த கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன.
அதோடு ரமண மகரிஷி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் உள்ளிட்டோரின் சமாதிகள் அமைந்துள்ளன.
விசேஷ விழாக்கள்
திருவண்ணாமலை கோயிலில் ஆண்டு தோறும் நான்கு பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.ஆனி மாத பிரம்மோற்சவம்
மாசி மகம் தீர்த்தவாரி
கார்த்திகை தீபம்
பரணி தீபம் மகாதீபம்(alert-passed)
இந்த மகாதிபத்த்திற்கு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஹெலிகாப்டர் (உலங்குவானூர்தி) இறங்கும் தளம் உள்ளது. கோயிலுக்கு வரும் பெரிய பிரபலங்கள் இங்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி கோயிலுக்கு செல்வது வழக்கம்.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் தங்கும் வசதியுடன் கூடிய அறைகள் கோயில் நிர்வாகம் நிர்வகித்து வருகின்றது. திருக்கோயிலைச்சுற்றி தனியாருக்குச் சொந்தமான விடுதிகளும் உள்ளன.



Your comment will be visible after approval.