கலியுகத்தின் கடைசி நாள் எப்போது ?
Table Of Content (toc)
இந்த பிரபஞ்ச்சத்தில் பல அதிசயங்களும் ஆச்சர்யங்களும் வரலாறுகளும் நிறைந்திருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. அப்படி நீங்கள் கொஞ்சமும் யோசித்துப் பார்க்காத மர்மம் நிறைந்த கலியுகத்தின் கடைசி நாள் எப்போது என்று தீர்மானிக்கும் கோவிலான கேதாரேஸ்வரர் குகை கோவில் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
இந்து மத நம்பிக்கைகள்
சிவன் கோவில் இந்து மத நம்பிக்கைகள், கடவுள்கள், புராணங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினால் தெரியும். அதற்குள் ஏராளமான அதிசயங்களும் மர்மமான் விஷயங்களும் புதைந்திருப்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு திருத்தலங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய பாரம்பரியமும் வரலாற்றுப் பின்புலமும் நிறைந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது. அதிலும் சிவன் கோவில்களை எடுத்துக் கொண்டோமானால், சிவனைப் போலவே மர்மங்களால் சூழ்ந்திருக்கும். மர்மங்கள் சூழ்ந்த கோவில் ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் பின்னாலும் ஏதாவது திருவிளையாடல்களும் வேறு சில காரணங்களும் இருக்கும். அவற்றில் நிறைய மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே தான் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான் ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில்.இந்த கோவில் எங்கு உள்ளது
இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன. இந்த மர்மங்கள் நிறைந்த குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் இருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட அதிசயக் கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில்.கேதாரேஸ்வரர் குகை கோவிலின் மர்மம்
இந்த கோவில் மட்டுமல்ல. இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது. கடும் குளிர் இந்த குகை மற்ற குகைகளைப் போல அல்ல. தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம் தான். குறிப்பாக மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.நான்கு யுகங்கள்
இந்த குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம்.கிருதா யுகம் [ சத்ய யுகம் ]
திரேதா யுகம்
துவாபர யுகம்
கலியுகம்



Your comment will be visible after approval.