ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆனது, கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிட்டு வந்தான்.
அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிட்டால்.
அடுத்த நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க, இவன பெத்து, பார்த்துப் பார்த்து வளர்த்து, ஆளாக்கி படிக்க வைத்து கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா.
ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு" என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா.
அதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை வந்தது,
முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை, இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான்.
அடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை, ஏனென்றால்
அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை.
அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால்....
அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு "அல்வா" கொடுப்பது என்ற பெயரும் வந்தது.
அல்வா கொடுபதின் ரகசியம்... இதுதான்.

Your comment will be visible after approval.