தேவையான பொருட்கள் :
- நெல்லிக்காய் - 10
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.
சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.
நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்றாக தூவி பிசறி விடவும்.
வெறும் கடாயில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.


Your comment will be visible after approval.