Sugarcane
கரும்பு பாயாசம்
தேவையான பொருட்கள் :
- 1/2 litre கரும்பு ஜீஸ்
- 1/4 கப் அரிசி
- 2 தேக்கரண்டி நெய்
- 1 கைப்பிடியளவு முந்திரி
- 5 தேக்கரண்டி பால்
செய்முறை :
முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
முந்திரி பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.முந்திரி பொன்னிறமானதும் அதை கடாயில் இருந்து தனியாக எடுத்து வைத்துவிட்டு கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும்.
பிறகு கரும்பு சாறை கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுடன் பாலை சேர்க்கவும்.
இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் பால் கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
அரிசி மென்மையாக மாறும் வரை 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாக அரிசியை சமைக்கவும். அதன் பிறகு முழுமையாக வெந்ததும் அதில் உலர்ந்த பழங்களை சேர்த்து கிளறி கொள்ளவும்.
இப்போது இனிப்பான கரும்பு பாயாசம் தயார்.இதை சிறுவர்களுக்கு சிற்றுண்டியாக கொடுக்கலாம். உடலுக்கு அதிக குளுக்கோஸ் சக்தியை அளிக்கும் உணவாக இது இருப்பதால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.

Your comment will be visible after approval.