கேரட் பாயசம் அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் கலந்த பாலின் சுவை நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவ காலங்களிலும் அனைவருக்கும் மிகவும் பொருத்தமானது. கேரட் கீர் கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான ஆகாரம் ஆகும். இதுபோன்ற ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல் என்பதால், கேரட் பாயசம் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது.இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
தேவையான பொருட்கள் :
- 2 Numbers துருவிய கேரட்
- 1 லிட்டர் பால்
- 4 தேக்கரண்டி சீனி
- 1 கப் நெய்
- 8 Numbers முந்திரி
- தேவையான அளவு கிஸ்மிஸ்
- தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்
செய்முறை :
Step 1: ஒரு கடாயில் நெய் சேர்த்து, நெய் சூடானதும் முந்திரி சேர்த்து, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
Step 2: அதே வாணலியில் துருவிய கேரட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறவும். கேரட்டின் பச்சை வாசனை போனதும் அதில் பால் சேர்த்து 8-10 நிமிடங்கள் வரை அடி பிடிக்காமல் கிளறி வேகவிடவும்.
Step 3: பாயசம் தன்மை கெட்டியாக மாறும் வரை காத்திருந்து பிறகு அதில் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்த பிறகு அது கரையும் வரை கிளறி கொதிக்க விடவும்.
Step 4: பின்பு அதில் சில உலர்ந்த திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் பாதாம் பிஸ்தா கூட நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்வது பாயசத்தின் சுவையாய் இன்னும் அதிகமாக்கும்.
Step 5: வீடே மணக்கும் சுவையான கேரட் பாயசம் தயாராகிவிட்டது. சூடாக உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறுங்கள்.

Your comment will be visible after approval.