Om Namah Shivaya
ஓம் நமசிவாய
சிவ பெருமானின் மூலமந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம்.
மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளாக விளங்குபவர் சிவ பெருமான். இவரின் ஓம் நமசிவாய மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம்.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க (alert-success)
என மாணிக்கவாசகர் சிவ புராண பாடலை சிவபெருமானின் நமசிவாய மந்திரத்துடன் தொடங்கியுள்ளார்.
இந்து தர்மத்தில் வழிபாடு என்பது வெறும் இறைவனைத் தொழுவதல்ல. அவருக்காக உச்சரிக்கப்படும் ஒவ்வொரு மந்திரமும், ஸ்லோகமும் பல்வேறு பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க மனமும், இந்த பிரபஞ்சத்துடன் சேர ஆரம்பிக்கும்.
சிவனை வழிபட்டால் முதலில் பிரச்னை வருகிறதே ஏன் தெரியுமா?
இறைவனுக்கு உகந்த மந்திரங்கள் இந்த அண்ட சராசரங்களின் ஆகர்ஷண சக்தியுடன் தொடர்புடையது. அதனால் அவரின் பெயர்களையும், மந்திரங்களையும் உச்சரித்து வர நாம் அயனவெளியில் சஞ்சரிக்கக்கூடிய அதிர்வலைகளை உணர முடியும்.
ஓம் நமசிவாய மந்திர பொருள்
ஓம் என்பது பிரணவ மந்திரம்.
சி - என்பது சிவபெருமானைக் குறிப்பதாகும்
வா என்பது அம்பாளைக் குறிப்பதாகும்
ய என்பது மனிதர்களையும், ஜீவன்களை குறிப்பதாகும்
நம என்றால் ஜீவன்கள் பற்றிக் கொண்டுள்ள மாயை, ஆணவன், கர்மம் என்ற முன்று கைவிட வேண்டியதைக் காட்டுகிறது. (alert-passed)
இந்த கை விடவேண்டிய விஷயங்கள் சூழ்ந்ததாக மனித வாழ்க்கை அமைந்துள்ளது. அவற்றிலிருந்து விடுபட்டு அம்மையப்பனின் பாதங்களை பற்றிக் கொள்பவர் யாரோ அவருக்கு முக்தியை அருளக் கூடியவர்.
இப்படி உலக தத்துவத்தையும், ஒருவர் கைவிட வேண்டியதை உணர்த்தக் கூடிய உண்மை பொருளாக விளங்கக் கூடியது தான் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தின் பொருள்.
***Om Namah Shivaya***


Your comment will be visible after approval.