உலகமே என் கைக்குள் என்று சொல்லி கையை சுழற்றி விபூதியும், வாயிலிருந்து லிங்கமும் எடுத்த புட்டபர்த்தி #சாய்பாபா சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நான் கடவுளின் தூதுவர், எனக்கு கடவுளிடமிருந்து நேரடியாக செய்தி வருகிறது எனச் சொன்ன #மிர்சா_குலாம் கடைசியில் கவுந்தடித்து விழுந்து இறந்து போனார்.
இப்போது ...
நானே ஆதிபராசக்தி கடவுளின் மறு உருவம் என ஊருக்கே அருள் வாக்கு சொன்ன #பங்காரு_அடிகள் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அற்புதங்கள் செய்வதாக மாயாஜால வித்தை காட்டிக்கொண்டு, தன்னைக் கடவுள் என வாதிட்ட இவர்கள் அனைவருமே வயதாகி நோயாலும் விபத்தாலும் இறந்து போனார்கள் .
ஆனாலும் உலகம் அதன் பாட்டுக்கு இயங்குகிறது.
எவ்வித சிறு மாற்றமும் இல்லை.
எல்லா மனிதரையும் போல பிறந்தார்கள், உண்டார்கள், உறங்கினார்கள், , அதேபோல் எல்லா மனிதனையும் போல இறந்தும் போனார்கள்.
அப்போ தன்னை கடவுள் என சொல்லிக்கொண்டு இவர்கள் அனைவரும் சாதித்தது என்ன?
ஆம் ஒன்றே ஒன்றுதான் சாதித்தார்கள்
அதுதான் பணம், சொத்து, ஆடம்பர வசதிகள்.
இலகுவாக சம்பாதிக்க இது ஒன்றே வழி என கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்.
பக்தியின் பெயரால் பல கோடிக்கு அதிபதியானார்கள்.
சிந்திக்க மறந்த கூட்டம் சில்லறையை அள்ளி வீசியது.
ஆனால் ....
இறப்பு என்ற ஒன்று வந்து இவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விடுகிறது.
கடைசியாக சிந்திக்க ஒன்று..
எந்த மதமாக இருந்தாலும்
மனிதன் எப்போதுமே கடவுளாக மாட்டான்.
படித்ததில் பிடித்தது. 👍

Your comment will be visible after approval.