2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்.
3.உறவினர்களை தங்களது வீட்டுக்கு வரச் சொல்லி முழு மனதுடன் அழைப்பு விடுங்கள்.
4. சாலைகளில் நடக்கும் போது தலையை நிமிர்ந்து நடந்து செல்லுங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை பார்த்தால் புன்னகை செய்து
குடும்ப நலங்களை விசாரியுங்கள்.
5.வீட்டுக்குள்ளேயே இருந்து வாழ்க்கையை கழிக்காதீங்க...
பிற்காலத்தில்
உதவிக்கு யாரும் வராமல் மன நோயாளியாக ஆக நேரிடும்.
6. தங்களுடைய திறமைகள் அடுத்தவர்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும்.
7. வாரம் ஒருமுறையாவது குடும்பத்துடன் அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்.
8.சொத்து,தங்கம் மற்றும் பணத்தை நினைத்து நினைத்து டென்சன் ஆகாதீங்க.
9. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சிரிங்க.
10. நான் பெரிய ஆள்,எனது கட்டளைக்கு அனைவரும் கட்டு பட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்க
இல்லையேல்
உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், வேலை ஆட்கள்
உங்களுடன் போலியாகதான் பழகுவார்கள்.
11.வங்கியில் பணத்தை சேர்ப்பதை தவித்து முடிந்த அளவு தானம்,தர்மம் செய்து புண்ணியத்தை
சேர்க்க பழகிக்கொள்ளுங்கள்.
12. உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீங்க.
13. இன்னும்
சில நொடி, சில நிமிடம், சில நாட்கள்,
சில மாதம்,
சிலஆண்டுகளில்
இந்த புண்ணிய பூமியை விட்டு போய்விடுவோம் என்ற எண்ணத்தில்
வாழ பழகுங்கள்.
14.இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு,
உடன் பிறந்தவர்கள்,
சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம்,பதவி இவை அனைத்தும் உங்களுடன் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
15. உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாக வையுங்க...
16. வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும்... அது இல்லாமலேயே ஏனோதானோ என்று இருக்கக் கூடாது.
17. இதைப் படித்துவிட்டு இவன் முதல்ல கடைப்பிடிக்கிறானா என்று நினைக்காதீங்க.
எனக்கும் இந்த சிந்தனைகள் பொருந்தும்.
18. இந்த ஆன்மா பூமிக்கு வந்த நோக்கம் என்ன என்பதை தெரிந்து சிந்தித்து செயல் படுங்கள்.
பெண்,மண்,பணம், காசு,துட்டு,
மணி போன்ற வற்றின் பின்னால்
அலையாமல்நல்ல மனிதனாக வாழ பழகிகொள்.

Your comment will be visible after approval.