காலத்தின் தேவை கருதி நம் சித்தர்களின் குரல் நண்பர்களுக்காக அபூர்வ ஓலை சுவடிகளில் நம் முன்னோர்கள் வழி வந்த சித்தர்களால் சொல்லப்பட்ட அபூர்வ கட்டு மந்திரங்களை இன்று தருகிறேன்....
"ஓம் பைரவா, உத்தண்ட பைரவா,
ஏந்திய கபாலமும், ரத்தின மாலையும், நாக பாஷமும், போக வேஷ்டியும், ஸ்வாநத் வாகனமும்,
அடித்த தண்டும், பிடித்த பார்வையும், நேரிட்ட மேனியும்,
இதோ என் காளீக்களீள் எனக்கு அருள் செய்ய புறப்பட்டார்.
என்னுடைய பைரவனார் தன்மையைப் போல் யாம் இருப்போமென்று,
புத பிரேத பிசாசு கணங்களைக் கட்டு,
பிற்பில்லி சூன்யம் வஞ்சனை நோயைக் கட்டு,
இரும்பு வலையை உருக்கியே எட்டுத் திக்கும் பதினாறு கோணமும் கட்டு,
ஆகாசம் பூமி அதிரவே கட்டு,
எமனைக் கட்டு , எமதுதரைக் கட்டு,
நாட்டைக் கட்டு , நகரத்தைக் கட்டு,
சந்தனப் பாடு தனித்தனியே கட்டு,
சொப்பனப் பேய்களை சுட சுட கட்டு,
அகார உகார ஈஸ்வர புத்திராய, வடுக நாதாய,
கிணி கிணி சற்வேத்நாய, ரண்டி ரண்டி அகோர வீர பத்திராய,
ஓம் குருவே நமசிவய சுவாஹா"
திக்கு கட்டு:-
(01) திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(02) புவியை தொட்டு வணங்கி "யங்" என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும்.
(03) "வங்" என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்.
(04) "சிங்" என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்.
(05) "மங்" என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்.
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்.....
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்....
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பு+மி பு+டமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே.
உடல்கட்டு:-
--------------------
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம். ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது.
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்.
"உடற்கட்டு மந்திர பிரயோகம்:-
*********************************
மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் ...
"உடற்கட்டு மந்திரம் :-
***********************
"ஓம் உமா மகேஸ்வரன் முன்னிற்க பாதமிரண்டும் பூமி தேவி காக்க ,
கனுக்காலிரண்டும் கணபதி காக்க ,
துடையுமுந்தியும் துர்க்கை காக்க ,
வயிறு மார்பும் வைரவன் காக்க ,
கழுத்தும் புஜமும் கதிர்வேல் காக்க ,
கண்ணும் புருவமும் காளி காக்க ,
முகமும் கபாலமும் மும்மூர்த்தி காக்க,
ஓம் அம் உம் சம் வம் சிவ சிவா
கட்டு கட்டு என் தேகம் முழுவதும்
சங்கு சக்கரம் காக்க பகைவரைக்கட்டு ,
பிசாசுகளை கட்டு எதிரிகளை கட்டு ஏவலை கட்டு ,
இந்திரன் முதல் ஈசானயங்கட்டு நான் தொட்ட மந்திரம் நீ தொட்ட மந்திரம் ,
நான் தொட்ட மூலி ,நீ தொட்ட மூலி
எட்டு திசையும் பதினாறு கோணமும் என் முகமாக
ஓம் சிவய நம சிவய நம சிவய நம" ...
"இந்த மந்திரத்தை ஓடுகின்ற தண்ணீரில் நின்று கொண்டு 1008 ஜெபித்து விட்டு மறுநாளில் இருந்து பிள்ளையார் பிடித்து வைத்து அருகு சூட்டி அதற்கான அவள் பொறி கடலை படைத்து ஒரு நாளுக்கு 108 வீதம் 11நாட்கள் ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .இதனால் சர்வ மந்திர சித்தியும் சர்வ மூலிகை சித்தியும் ஆகும்.

Your comment will be visible after approval.