அங்கு பிள்ளையின் அப்பா மிகவும் கோபத்துடன் இவ்வளவு லேட்டாவா வருவீங்க என் பிள்ளைக்கு எதவாது நடந்தா யார் பொறுப்பு என்று காரசாரமாக பேசினார்.
மருத்துவர்: சிரித்த முகத்துடன் கூறினார் எனக்கு வைத்தியசாலையில் இருந்து Call வந்தது அவசரமாக ஓடி வந்துட்டேன். பொறுமையாக இருங்கள் உங்கள் மகனுக்கு ஒன்றும் ஆகாது. நான் வந்துவிட்டேன் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
ஆமாம் சொல்விர்கள் உங்கள் மகனுக்கு இப்படி ஒன்று நடந்தால் இப்படி லேட்டா வந்து இப்படியெல்லாம் பேசுவீங்களா என்றார் பிள்ளையின் தகப்பனார்..
Doctor சொன்னார் : புன்னகையுடன் பொறுமையாக இருங்கள் நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபரேஷன் ரூம்க்கு சென்று சில மணித்தியாலங்கள் கழித்து வெளியே வந்து உங்கள் மகன் மிக்க நலமாக உள்ளார். மேலதிக விடயங்களை Nurse இடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டு சென்றார்.
அவ்விடம் வந்த Nurse இடம் தகப்பனார் பிள்ளை தொடர்பில் கேட்டுவிட்டு, Doctor ஏன் அவசரமா போகிறார் என்று வினவினார்.
அதற்க்கு Nurse சொன்னார் :
Doctor இன் மகன் நேற்று விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தார். அவரது இறுதி கிரியை மயானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தநேரம் உங்கள் பிள்ளையின் நிலை குறித்து Call பண்ணிய போது அதை விட்டுட்டு Doctor உடனே ஓடி வந்து ஆபரேஷன் செய்து விட்டு மீண்டும் மகனின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டார் என Nurse கூறினார்.
தகப்பன் தான் ஆவேசப்பட்டது தவறு என்பதை உணர்ந்தவனாக மிகுந்த கவலையுடன் தன் மகனை பார்க்க சென்றார்.
நீதி : யாரையும் வெளியில் பார்த்து எடை போடாதீர்கள் அவர்களுக்குள்ளும் உங்களை விட அதிகம் பொறுப்பும் கவலையும் இருந்திருக்கும்.
எனவே வார்த்தைகளை பேணிக்கொள்ளுங்கள்.. !!

Your comment will be visible after approval.