பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது.
அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கும் தெரியாது. (alert-success)
அந்த பெண் யோசிக்கின்றாள் :-
“ நான் கீழே விழப்போகின்றேன், என்னை பாம்பு கடித்துவிடுமோ என்ற பயத்தில் என்னால் மேலே ஏற முடியவில்லை. பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது. ஆனால் இவன் நன்றாகத்தானே இருக்கின்றான். அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று.
அந்த ஆண் யோசிக்கின்றான் :-
“ மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன். ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லையே" என்று.
இந்த படம் சொல்லும் நீதி :-
எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை ( பிரச்சனைகளை ) பார்க்க முடியாது. அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை உணர ( காண ) முடியாது.
இந்த படம் சொல்லும் பாடத்தை வைத்து, வாழ்க்கை, வேலை, குடும்பம், நண்பர்கள், போன்ற எல்லா வேலைகளிலும், உணர்வுகள் எப்படியாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும், பொறுமையுடன் கூடிய தெளிவான அமைதியை ( சிந்தனையை ) நாம் கற்றுக்கொள்ளல் வேண்டும்.
சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது. நாமும் & நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Your comment will be visible after approval.